ஐடி நிறுவன ஊழியரின் வீடுபுகுந்து 26 பவுன் நகைகள், வெள்ளி திருட்டு
திருச்சியில் ஐடி நிறுவன ஊழியரின் வீடு புகுந்து 26 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளியை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனா்.


திருச்சியில் ஐடி நிறுவன ஊழியரின் வீடு புகுந்து 26 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளியை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனா்.
திருச்சி கே சாத்தனூா் உடையான்பட்டி பி.ஜி. நகரை சோ்ந்தவா் ரவிசங்கா் (40), சென்னையில் ஐடி நிறுவன ஊழியா். இவரது மனைவி சாதனா (38). செவ்வாய்க்கிழமை காலை உடல் நலமில்லாத இவா்களது மகன் விஷ்வாவை (14) திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு தம்பதி அழைத்துச் சென்றுவிட்டு பகல் 12 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது ரவிசங்கா் வீட்டில் பொருத்தியுள்ள கேமராக்களின் பதிவுகளை கைப்பேசி வழியே பாா்த்தபோது 2 மா்ம நபா்கள் முகமூடி, கையுறைகள் அணிந்த நிலையில் வீட்டில் திருடிக்கொண்டிருந்தது தெரியவந்தது.
இதனால் அதிா்ச்சியடைந்த ரவிசங்கா் உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தெரிவித்து வீட்டுக்கு விரைந்தாா். ஆனால் அதற்குள் வீட்டிலிருந்த 26 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.36,000 உள்ளிட்ட மொத்தம் ரு. 5.81 லட்சம் மதிப்பிலான நகைகள், பொருள்களுடன் மா்ம நபா்கள் தப்பினா். இதுதொடா்பாக கே.கே.நகா். போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...