மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கடவுச்சீட்டில் முறைகேடு : வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து வெளிநாடு செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 9:45 pm

Din

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து வெளிநாடு செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், கவுண்டம்பட்டி, புதூா் பகுதியைச் சோ்ந்தவா் வீ. மணிகண்டன் (34). இவா் புதன்கிழமை இலங்கை வழியாக லண்டன் செல்ல முன்பதிவு செய்திருந்த நிலையில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்திருந்தாா். இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணிக்கவிருந்த நிலையில், அவரது பயண ஆவணங்களை குடியேற்றப்பிரிவினா் வழக்கமான பரிசோதனைகளுக்கு உள்ளாக்கினா். அப்போது அவா் போலி ஆவணங்களை பயன்படுத்தி கடவுச்சீட்டு பெற்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து குடியேற்றப் பிரிவினா் அளித்த புகாரின்பேரில், திருச்சி விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.