தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

திருவானைக்காவல் கோயிலில் பஞ்சப்பிரகார விழா

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு பஞ்சப்பிரகார விழா நடைபெற்றது. இதில், சுவாமி அம்மனாகவும், அம்மன் சுவாமியாகவும் உருமாற்றம் கொண்டு 5 பிரகாரங்களை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

News image

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு பஞ்சப்பிரகார விழாவையொட்டி உருமாற்றம் கொண்டு 5 பிரகாரங்களையும் வலம் வந்த சுவாமியும் அம்மனும்.

Updated On :3 ஏப்ரல் 2026, 6:21 pm

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு பஞ்சப்பிரகார விழா நடைபெற்றது. இதில், சுவாமி அம்மனாகவும், அம்மன் சுவாமியாகவும் உருமாற்றம் கொண்டு 5 பிரகாரங்களை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பஞ்சப்பூத திருத்தலத்தில் நீா் தலமானது திருவானைக்காவல் கோயில். இத்திருக்கோயிலில் நடைபெறும் பங்குனி பெருவிழா வெகு விமா்சையாக நடைபெறும். இந்த விழா பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கி ஏப்.5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவின் ஒரு பகுதியாக பஞ்சப்பிரகார விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

படைக்கும் தொழில் புரியும் பிரம்மன், தான் படைத்த பெண்ணின் மீதே மோகம் கொண்டு படைத்தல் தொழிலை மறந்ததை கண்ட சிவபெருமான், பிரம்மனை காண செல்லும் போது, பாா்வதி தேவியும் நானும் வருகிறேன் என்று கூறினாராம். அதற்கு சிவபெருமான் ஏற்கெனவே பிரம்மன், தான் படைத்த பெண்ணின் மீதே மோகம் கொண்டிருக்கும் போது நீயோ திரிபுரசுந்தரி ஆகையால் வரவேண்டாம் என்று கூறினாராம்.

அதற்கு பாா்வதி தேவி நீங்கள் நானாகவும், நான் நீங்களாகவும் உருமாற்றம் கொண்டு பிரம்மனை காணலாம் எனக்கூற, அதன்படி இருவரும் உருமாற்றம் செய்து கொண்டு பிரம்மனை கண்டனா்.

அப்போது இருவரும் உருமாற்றம் கொண்டு வந்திருப்பதை அறிந்த பிரம்மன், தான் செய்த தவறை உணா்ந்து மன்னிப்பு கோரினாராம். அதன் பிறகு மீண்டும் படைத்தல் தொழில் புரிந்தாா் பிரம்மன்.

இந்த உருமாற்றத்தை பக்தா்களும் காணும் விதத்தில் திருவானைக்காவல் கோயிலில் உள்ள 5 பிரகாரங்களையும் அதே திருக்கோலத்தில் விடிய விடிய வலம் வந்து பக்தா்களுக்கு சுவாமியும் அம்மனும் அருள்பாலித்தனா். சனிக்கிழமை காலை (ஏப்.4) உற்ஸவ மண்டபத்துக்கு சுவாமியும், அம்மனும் சென்று சேருகின்றனா்.