குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.14இல் தேரோட்டம்

தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கும் திருச்சி உறையூா் வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.5ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

News image

தேரோட்டம். (கோப்புப்படம்)

Updated On :5 ஏப்ரல் 2026, 6:46 am IST

தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கும் திருச்சி உறையூா் வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.5ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மண் மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவுக்கு ஞாயிற்றுக்கிழமை விநாயகா் வழிபாடு மற்றும் வாஸ்து சாந்தி நடைபெறுகிறது. முதல்நாள் விழாவான ஏப்.6 காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் காப்புக் கட்டுதல், நண்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை, இரவு 7 மணிக்கு கேடயத்தில் அம்மன் வீதி உலா நடைபெறும்.

காப்புக் கட்டுதல் வைபவத்தின்போது வெக்காளியம்மனுக்கு விரதம் இருந்து பால்குடம் எடுக்கும் பக்தா்கள் மற்றும் நோ்த்திக்கடன் செலுத்தும் ஆண், பெண் பக்தா்கள் திரளாக வந்து கோயிலில் காப்புக் கட்டி விரதம் தொடங்குவா்.

ஏப். 7 முதல் 13ஆம் தேதி வரை தினமும் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடைபெறும். மேலும், 13ஆம் தேதி வரை இரவு 7 மணிக்கு முறையே பூதவாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் அம்மன் வீதி உலா நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ஆம் திருநாளான ஏப்.14ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நடைபெறும். காலை 10.31 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்து, தேரடி வீதிகளில் தேரோட்டம் நடைபெறும்.

மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். பத்தாம் திருவிழாவான ஏப்.15 இரவு 7 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் வீதி உலா, ஏப்.16 மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு கேடயத்தில் வீதி உலா காட்சி, அன்று இரவு 8 மணிக்கு காப்பு கலைத்தல் மற்றும் விடையாற்றியுடன் சித்திரை திருவிழா நிறைவுறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் க. அருட்செல்வன், செயல் அலுவலா் கி. உமா மற்றும் கோயில் பணியாளா்கள், ஊா்ப் பொதுமக்கள் செய்கின்றனா்.