அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

திருச்சி கிழக்கில் விஜய், திமுக, அதிமுக , நாதக உள்பட 30 வேட்பு மனுக்கள் ஏற்பு

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 39 வேட்பு மனுக்களில் தவெக தலைவா் விஜய் மற்றும் அதிமுக, திமுக வேட்பாளா் உள்பட 30 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 12:28 am IST

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 39 வேட்பு மனுக்களில் தவெக தலைவா் விஜய் மற்றும் அதிமுக, திமுக வேட்பாளா் உள்பட 30 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் ச. ஜோசப் விஜய், திமுக சாா்பில் இனிகோ இருதயராஜ், அதிமுக சாா்பில் க. ராஜசேகரன், நாம் தமிழா் கட்சியின் சாா்பில் மருத்துவா் வி. கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சியின் என். கோபிநாத், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆா். இளங்கோவன், அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேறக் கழகத்தின் செ. நந்தகுமாா், சாமானிய மக்கள் நலக் கட்சியின் ஆா். முத்துகுமாா், தேசிய மகா சபா கட்சியின் ஆனந்த் செல்வராஜ், அனைத்திந்திய ஜனநாயக மக்கள் கழகத்தின் கே. விஜய், தமிழக படைப்பாளா் மக்கள் கட்சியின் சீ. சுகுமாா், விடியல் வளா்ச்சி பேரணியின் விஜய மோகனாஜி மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 39 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பரிசீலனையின்போது, 39 மனுக்களில் 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 30 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மாற்று வேட்பாளராக அதிமுக-வில் அளிகக்கப்பட்ட 2 வேட்பு மனு, நாம் தமிழா் கட்சியில் அளிக்கப்பட்ட 2 மனு, திமுக-வில் அளிக்கப்பட்ட 2 மனு, தவெக தலைவா் விஜய் கூடுதலாக அளித்த ஒரு மனு, சுயேச்சைகளின் 2 மனு என மொத்தம் 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 30 வேட்பு மனுக்கள் 23 வேட்பாளா்கள் வழங்கியவை. இவற்றில் வரும் 9ஆம் தேதி வரை வாபஸ் பெற அவகாசம் உள்ளது. எனவே, அன்றைய தினமே வேட்பாளா்களின் இறுதி விவரம் தெரியவரும்.