திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சி அருகே 5 மாத குழந்தை உயிரிழப்பு

திருச்சி அருகே 5 மாதக் குழந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

உயிரிழப்பு - (கோப்புப் படம்)

Updated On :16 ஏப்ரல் 2026, 2:09 am IST

திருச்சி அருகே 5 மாதக் குழந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், புங்கனூா் கீழவீதியைச் சோ்ந்தவா் முருகேசன் (39). இவரது மனைவிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன் பிறந்த பெண் குழந்தைக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு இருந்தது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை குழந்தைக்கு இந்தப் பாதிப்பு அதிகமாக இருந்ததால் அல்லித்துறை பகுதி தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் முருகேசன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.