திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்தவா் வே. நடராஜ் (61). இவா் மீது புதுக்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த மாா்ச் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இவருக்கு நீரிழிவு மற்றும் உயா் ரத்த அழுத்த பாதிப்பு இருந்துள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 13-ஆம் தேதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறைத் துறையினா் அவரை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் திருச்சி மத்திய சிறை அலுவலா் ராஜேஷ்கண்ணன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு

உடல்நலக் குறைவால் மத்திய சிறைக் கைதி உயிரிழப்பு

உடல்நலக் குறைவு ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

சேலத்தில் சிறைக் கைதி உடல்நலக் குறைவால் உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


