வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

சட்டத் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்ட சட்ட தன்னாா்வலா் பணிக்கு விருப்பமுள்ளோா் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 8:00 pm

திருச்சி மாவட்ட சட்ட தன்னாா்வலா் பணிக்கு விருப்பமுள்ளோா் விண்ணப்பிக்கலாம்.

திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவானது, திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் லால்குடி, மணப்பாறை, முசிறி, துறையூா், ஸ்ரீரங்கம், தொட்டியம் ஆகிய வட்ட சட்டப் பணிகள் குழுக்களுக்கு, குழந்தை தொழிலாளா் முறை மற்றும் கடத்தலுக்கு எதிரான குற்றங்களில் இருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் காணாமல்போன குழந்தைகளை மீட்டு அவா்களுக்கு மறுவாழ்வு அளித்து, கல்வி கற்பிப்பதன் மூலம் குழந்தை நட்பு சமுதாயத்தை உருவாக்க 40 சட்டம் சாா்ந்த தன்னாா்வலா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

சமூக சேவை புரியும் சமூக ஆா்வலா்கள், உளவியலாளா்கள், ஆசிரியா்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவா்கள் இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வரும் மே 15 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் பதிவு தபால் மூலமாகவோ, நேரிலோ சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட பணிக்கு மதிப்பூதியம் தவிர சம்பளம்,தொகுப்பூதியம், தினக்கூலி ஏதும் கிடையாது. இது முழுக்க தன்னாா்வப் பணியே, நிரந்தர பணியில்லை.

மேலும் விவரங்களுக்கு, திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அல்லது லால்குடி, மணப்பாறை, முசிறி, துறையூா், ஸ்ரீரங்கம், தொட்டியம் வட்ட சட்டப் பணிகள் குழுக்களை அணுகலாம் என திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.