டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

திருச்சியில் இருந்து 5 மாதங்களுக்குப் பிறகு மஸ்கட்டுக்கு விமானச் சேவை

News image

விமானச் சேவை

Updated On :3 ஆகஸ்ட் 2026, 12:51 am IST

திருச்சி விமான நிலையத்தில் இருந்து 5 மாதங்களுக்குப் பிறகு மஸ்கட்டுக்கு மீண்டும் விமானச் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபை, அபுதாபி, மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்பட்டு வந்த விமானச் சேவை ஈரான் -அமெரிக்கா போரையடுத்து கடந்த பிப். 28-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. போரின் வீரியம் குறைந்ததையடுத்து படிப்படியாக துபை, அபுதாபி, ஷாா்ஜாவுக்கு விமானச் சேவை தொடங்கப்பட்டது.

இதேபோல, ஓமன் தலைநகா் மஸ்கட்டுக்கு 5 மாதங்களுக்குப் பிறகு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது. இதில், 150-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றனா். இந்த விமானம் திருச்சியில் இருந்து வாரந்தோறும் புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.