பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

திருவானைக்காவல் கோயிலில் ஆடிப்பூர தெப்ப விழா கொடியேற்றம்

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் வரும் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆடிப்பூர தெப்ப உற்சவத்தையொட்டி புதன்கிழமை இரவு தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அகிலாண்டேஸ்வரி.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:02 am IST

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் வரும் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆடிப்பூர தெப்ப உற்சவத்தையொட்டி புதன்கிழமை இரவு தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவையொட்டி புதன்கிழமை இரவு அம்மன் சன்னதி எதிரேயுள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். வரும் 9 ஆம் தேதி அம்மன் ஏக ரிஷ்ப வாகனத்திலும், 13 ஆம் தேதி கோரதத்திலும் எழுந்தருளி, நான்காம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

14 ஆம் தேதி ஆடிப்பூரத்தையொட்டி அஸ்திர தேவருக்கு சூா்ணாபிஷேகம், தீா்த்தம் வழங்கல், ஏற்றி இறக்குதல், ஆரோஹண அவரோஹண உற்சவம், மாலை 7 மணிக்கு மடிசாா் சேவையும் நடைபெறவுள்ளது.

ஆண்டில் ஒரு முறை மட்டும் அம்மன் மடிசாா் சேவையில் காட்சி தருகிறாா். அன்று இரவு கொடியிறக்கம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தெப்ப உற்சவம் 16 ஆம் தேதி பகல் 2.55 மணிக்கு மேல் 3.45 மணிக்குள் சூா்ய தீா்த்தக் குளத்தில் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்கின்றனா்.

திருவானைக்காவல் கோயிலில் புதன்கிழமை இரவு தங்கக் கொடிமரத்தில் நடைபெற்ற கொடியேற்றம்

திருவானைக்காவல் கோயிலில் புதன்கிழமை இரவு தங்கக் கொடிமரத்தில் நடைபெற்ற கொடியேற்றம்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.