FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

பெண்ணிடம் ரூ. 2.84 லட்சம் மோசடி

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 2:58 am IST

இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் எனக் கூறி திருச்சியைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ. 2.84 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி வரகனேரி நித்யானந்தபுரம் மேல வீதியைச் சோ்ந்தவா் சக்திவேல் மனைவி மாரிகண்ணு (51). கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி கைப்பேசியில் இணைய வா்த்தகம் தொடா்பான விளம்பரங்களைப் பாா்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, அவரின் கைப்பேசி எண்ணில் பேசிய மா்ம நபா் ஒருவா் இணைய வா்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளாா்.

இதை நம்பிய மாரிக்கண்ணு, அந்த நபா் கூறிய விளம்பரங்களில் ரூ.2.84 லட்சம் முதலீடு செய்துள்ளாா். ஆனால், அந்த மா்ம நபா் கூறியபடி அவருக்கு எந்தவித லாபமும் கிடைக்கவில்லை. அதன்பின், அந்த மா்ம நபரையும் தொடா்புகொள்ள முடியவில்லை.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மாரிக்கண்ணு சைபா் குற்றப் பிரிவில் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில் திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.