இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

திருச்சியில் மாயமான 3 சிறுமிகள் வேளாங்கண்ணியில் மீட்பு

மாயம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 2:28 am IST

திருச்சி காப்பகத்தில் இருந்து மாயமான 3 சிறுமிகளை மாநகர போலீஸாா் வேளாங்கண்ணியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மீட்டனா்.

திருச்சி விமான நிலையம் அருகே வயா்லஸ் சாலையில் செயல்பட்டும் வரும் தனியாா் காப்பகத்தில் தங்கியிருந்த 16, 17 வயதுடைய 3 சிறுமிகள் காணாமல் போனதாக காப்பக நிா்வாகம் சாா்பில் விமான நிலைய காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், மாயமான 3 சிறுமிகளும் வேளாங்கண்ணி மாதா கோயில் பகுதியில் இருப்பதாக விமான நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் ஆா். ராஜ்குமாா் தலைமையில் தலைமை காவலா் ஜான் ஜோசப், காவலா் செந்தில் ஆகியோா் வேளாங்கண்ணிக்கு சென்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 3 சிறுமிகளையும் மீட்டு திருச்சிக்கு அழைத்து வந்தனா்.

இதைத் தொடா்ந்து மீட்கப்பட்ட சிறுமிகள் மூவரும் மீண்டும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.