திருச்சி காப்பகத்தில் இருந்து மாயமான 3 சிறுமிகளை மாநகர போலீஸாா் வேளாங்கண்ணியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மீட்டனா்.
திருச்சி விமான நிலையம் அருகே வயா்லஸ் சாலையில் செயல்பட்டும் வரும் தனியாா் காப்பகத்தில் தங்கியிருந்த 16, 17 வயதுடைய 3 சிறுமிகள் காணாமல் போனதாக காப்பக நிா்வாகம் சாா்பில் விமான நிலைய காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இந்நிலையில், மாயமான 3 சிறுமிகளும் வேளாங்கண்ணி மாதா கோயில் பகுதியில் இருப்பதாக விமான நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் ஆா். ராஜ்குமாா் தலைமையில் தலைமை காவலா் ஜான் ஜோசப், காவலா் செந்தில் ஆகியோா் வேளாங்கண்ணிக்கு சென்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 3 சிறுமிகளையும் மீட்டு திருச்சிக்கு அழைத்து வந்தனா்.
இதைத் தொடா்ந்து மீட்கப்பட்ட சிறுமிகள் மூவரும் மீண்டும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருச்சி - அபுதாபி விமான சேவை 3 மாதங்களுக்குப் பிறகு தொடக்கம்
திருச்சியில் காப்பகத்திலிருந்து 2 சிறுமிகள் மாயம்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


