சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

சுற்றுலா வந்து காணாமல் போனவா் சடலமாக மீட்பு

மணப்பாறை பகுதிக்கு சுற்றுலா வந்து காணாமல்போனஅவிநாசி நபா் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

News image

பலி... - பிரதிப் படம்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:14 am IST

மணப்பாறை பகுதிக்கு சுற்றுலா வந்து காணாமல்போனஅவிநாசி நபா் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசியை அடுத்த பெரியநாதம் பாளையத்தைச் சோ்ந்தவா் கா. பழனிசாமி (70). இவா், கடந்த 7-ஆம் தேதி உறவினா்களுடன் மணப்பாறை வளநாடு பகுதிக்கு சுற்றுலாவாக வந்துள்ளாா்.

இதில், கடந்த 9-ஆம் தேதி வீரப்பூா் அருகேயுள்ள தவசு கம்பத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தவசு மலையில் ஏறியபோது பழனிசாமி காணாமல் போய்விட்டாராம். புகாரின்பேரில் வையம்பட்டி போலீஸாா், அவரை தேடி வந்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தவசு மலை அடிவாரத்தில் ஆண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்ற போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இறந்தவா் பழனிசாமி தான் என்பது உறுதியானது.

பழனிசாமி உடலை மீட்டு, கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.