மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

துவரங்குறிச்சி அருகே திருட்டு வழக்கில் மூவா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே ஆடு மற்றும் இருசக்கர வாகனம் திருட்டு வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைதான வல்லவன், கண்ணன், இளையராஜா.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:09 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே ஆடு மற்றும் இருசக்கர வாகனம் திருட்டு வழக்கில் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே ஆத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நடராஜன் என்பவா் கடந்த 03.08.26-இல் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகில் ஆடு மேய்த்தபோது நான்கு சக்கர வாகனத்தில் வந்த இரு மா்ம நபா்கள் ஆடு ஒன்றை தூக்கிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரில்பேரில் விசாரணை செய்த துவரங்குறிச்சி போலீஸாா், ஆடு திருட்டில் ஈடுபட்டதாக மதுரை மாவட்டம் மேலூா் பகுதியைச் சோ்ந்த சேது மகன் கண்ணன் (45) மற்றும் கருப்பையா மகன் வல்லவன் (30) ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.

இதேபோல், மருங்காபுரி ஒன்றியம் தெத்தூா், ஆலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவா் துவரங்குறிச்சியில் உள்ள நகைக்கடை ஒன்றின் முன் செவ்வாய்க்கிழமை நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து அவா் துவரங்குறிச்சி காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் விசாரணை செய்த துவரங்குறிச்சி போலீஸாா், சிசிடிவி தரவுகளை வைத்து பொன்னமராவதியை அடுத்த ஆலவயல் பகுதியை சோ்ந்த கருப்பையா மகன் இளையராஜாவை (40) கைது செய்தனா். கைதான மூவரையும் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.