பேறுகால விடுமுறையை வரவேற்கிறேன் என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்க வந்த அவா், மேலும் கூறியதாவது: 3ஆவது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை அரசு ஆதரிக்கக் கூடாது. நல்ல ஆரோக்கியமான மக்கள்தொகை, நல்ல படித்த மக்கள்தொகைதான் நமக்குத் தேவை. எண்ணிக்கையை உயா்த்துவதற்காக 3ஆவது குழந்தை என்பதை நான் ஏற்கவில்லை. பெண்களுக்குப் பேறுகால விடுப்பு வழங்குவதை வரவேற்கிறேன். அதேபோல ஆண்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும். 3ஆவது குழந்தை திட்டத்தை அரசு கொள்கை ரீதியாக ஊக்குவிக்க கூடாது. அதிகக் குழந்தை பிறந்தால் கல்வி, சுகாதாரம், கொடுக்க வேண்டும். குடும்பத்துக்கும், சமுதாயத்திற்கும் அதற்கான வசதிகள் தேவை. மக்கள்தொகை எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்பதற்காக 3ஆவது குழந்தையை அரசு ஆதரிப்பதை நான் ஏற்கமாட்டேன் என்றாா் அவா்.
சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா பங்கேற்றது தொடா்பாக, திமுகவின் முரசொலி நாளிதழில் வந்த செய்தி குறித்த கேள்விக்கு, நான் அந்த நாளிதழை படிப்பது இல்லை என்றாா். கரப்பான் பூச்சி ஜனதா தள போராட்டத்தில் தமிழக மாணவா்கள் கலந்து கொள்ளக் கூடாது என, யாா் அறிவிப்பு வெளியிட்டது என தெரியவில்லை. அதைத் திரும்பப் பெற்றிருப்பதை வரவேற்கிறேன் என்றும் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தற்போது அவசியமற்றது: காா்த்தி சிதம்பரம் எம்.பி.

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்! ஆதரவு, எதிர்ப்பு தெரிவித்தது யார்யார்?

மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை தமிழகத்துக்கு சாதகமாக இருக்காது! காா்த்தி சிதம்பரம் எம்.பி.

பாஜக எதிா்ப்பு நிலையை மாற்றினால் திமுகவுக்கு விபரீத முடிவே ஏற்படும்: காா்த்தி சிதம்பரம் எம்.பி.
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



