பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தினா் திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாநகா் மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) சாா்பில், பிராட்டியூரில் உள்ள வட்டாரப் போக்குவரத்துக் கழகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் சந்திரன், கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில், வாகன புதுப்பிக்கும் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும். புதிய மோட்டாா் வாகன சட்டம் 2019 - ஐ கைவிட்டு, மீண்டும் பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும். ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வந்து விபத்து ஏற்பட்டால் ஓட்டுநரை கொலை குற்றவாளியாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். நேரக் கட்டுப்பாடு எனக் கூறி சரக்கு வாகனங்களை முடக்கக் கூடாது. பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் சீனிவாசன், மாவட்டத் தலைவா் மணிமாறன், சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்க மாவட்ட பொருளாளா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தின் இறுதியில், போக்குவரத்து இணை ஆணையா் அலுவலகத்தில் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
தொடர்புடையது

தவெக தலைவா் விஜய்க்கு புதுகை எல்லையில் உற்சாக வரவேற்பு

புதிய தொழிலாளா் சட்டத்துக்கு எதிராக கோவையில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

சாலைப் போக்குவரத்துத் தொழிலாளா் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


