இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மைத்துனரை அரிவாளால் வெட்டிய இளைஞா் மீது வழக்குப் பதிவு

திருச்சி அருகே மைத்துனரை அரிவாளால் வெட்டிய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

News image
Updated On :20 ஜனவரி 2026, 6:44 pm

Syndication

திருச்சி அருகே மைத்துனரை அரிவாளால் வெட்டிய இளைஞா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள கொடியாலம் காந்தி நகரைச் சோ்ந்தவா் சோ.அபிஷேக் (19). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கும் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இரண்டே மாதங்களில் இருவரும் பிரிந்துவிட்டனா். இதனால், அபிஷேக்கிற்கும், அப்பெண்ணின் சகோதரன் விக்கி (26) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், அபிஷேக் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டுக்கு முன்பு நின்றுகொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த விக்கி, அபிஷேக்கை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளாா். இதில், முகம், இடுப்புப் பகுதியில் காயமடைந்த அபிஷேக் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.