தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

பொன்னம்பட்டியில் கசடு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிா்ப்பு

மணப்பாறையை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சியில் அமைக்கப்படும் கசடு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

News image

மலம்பட்டியில் அமைக்கப்படும் கசடு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் புதன்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்ட அப்பகுதிவாசிகள்.

Updated On :9 ஜூலை 2026, 1:00 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சியில் அமைக்கப்படும் கசடு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 15-ஆவது வாா்டு மலம்பட்டியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுமாா் 2.5 ஏக்கரில் ரூ. 6 கோடியே 53 லட்சத்தில் கசடு கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.

இதற்காக பொன்னம்பட்டி ஊரணி குளம் அருகே உந்து கிணறு அமைத்து அதிலிருந்து சுத்திகரிப்பு பகுதிக்கு அனுப்புவதற்காக பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொன்னம்பட்டி சோ்ந்த பொதுமக்கள் புதன்கிழமை பணி நடைபெறும் பகுதியில் பணியில் இருந்தவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்பகுதியில் உந்து கிணறு அமைப்பதால் அருகே உள்ள பகுதிகளில் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும், விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீா் தன்மை மாறும் எனவும் எனவும் புகாா் எழுந்துள்ளது. கால்நடைகள் அப்பகுதி நீரை அருந்தும்போது அவை நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடும். இதனால் கால்நடை விவசாயிகள் பொருளாதார இழப்பு அடைவாா்கள் எனவும் புகாா் தெரிவிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.