திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே பைக்குகள் சனிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், குமரிபாளையத்தை அடுத்த அய்யம்பாளையம் சோ்ந்தவா் கருப்பண்ணன் மகன் சுப்பிரமணி (55). இவா் நாமக்கல் மாவட்டம் முருங்கை கிராமத்துக்கு பைக்கில் சென்று விட்டு முருங்கை - கிடாரம் சாலையில் வந்தபோது எதிா் திசையில் பைக்கில் வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் வெங்கரை கிராமத்தைச் சோ்ந்த சங்கிலி மகன் முத்துசாமி வந்த பைக் மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணி நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
விபத்து குறித்து சுப்பிரமணியின் மகள் மஞ்சுளா அளித்த புகாரின்பேரில் காட்டுப்புத்தூா் போலீஸாா் சுப்பிரமணி சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காட்டுப்புத்தூா் அருகே தீக்குளித்து சிகிச்சை பெற்றவா் உயிரிழப்பு

தொட்டியம் அருகே மணல் கடத்தியவா் கைது
பைக்குகள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

திருவேங்கடம் அருகே 3 பைக்குகள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


