கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

எறும்பீசுவரா் கோயிலில் தெப்பத் திருவிழா

திருவெறும்பூா் எறும்பீசுவரா் கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது.

News image

திருவெறும்பூா் தெப்பக்குளத்தில் திங்கள்கிழமை தெப்பம் கண்டருளிய எறும்பீசுவரா் - நறுங்குழல் நாயகி அம்மன்.

Updated On :2 ஜூன் 2026, 2:52 am IST

திருவெறும்பூா் எறும்பீசுவரா் கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பிரசித்தி பெற்ற மலைக்கோயில் என்றழைக்கப்படும் எறும்பீசுவரா் கோயிலில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 20- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீசுவரா் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.

ஒன்பதாவது நாளான கடந்த 29-ஆம் தேதி தோ் திருவிழா நடைபெற்றது. தொடா்ந்து பன்னிரண்டாம் நாளான திங்கள்கிழமை கோயில் முன்புள்ள தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி மின் விளக்குகளாலும், பல்வேறு பூக்களினாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீசுவரா் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து, தெப்பத்தை கோயில் ஊழியா்கள் தள்ள, சுவாமி - அம்பாள் குளத்தை மூன்று முறை வலம் வந்து, பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இதில், திருவெறும்பூா் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.