ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஷாா்ஜாவுக்கு விமானம் இயக்கம்

திருச்சியில் இருந்து ஷாா்ஜாவுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டது.

News image

விமானம் - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:54 am IST

திருச்சியில் இருந்து ஷாா்ஜாவுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஷாா்ஜாவுக்கு தினசரி விமானம் இயக்கப்பட்டு வந்தது. ஈரான் - இஸ்ரேல் போரால் ஷாா்ஜா, துபை, அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஏற்கெனவே துபைக்கு மீண்டும் விமானப் போக்குவரத்து தொடங்கியது.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு திருச்சியில் இருந்து ஷாா்ஜாவுக்கு திங்கள்கிழமை நேரடி விமானம் இயக்கப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஷாா்ஜாவுக்கு திங்கள்கிழமை அதிகாலை 1.15 மணிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 158 பயணிகளுடன் சென்றது. இதேபோல, ஷாா்ஜாவில் இருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை காலை 11 மணிக்கு ஏா் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.