சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் கோடைத் திருநாள் உற்சவம் தொடக்கம்

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் கோடைத் திருநாள் என்னும் பூச்சாற்று உற்சவம் புதன்கிழமை மாலை தொடங்கியது.

News image

ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிக்கோடை திருநாளின் முதல் நாளான புதன்கிழமை மாலை கோடை மண்டபத்தில் புஷ்பம் சாத்துப்படி கண்டருளி, சேவை சாதித்த ஸ்ரீரங்கநாச்சியாா்.

Updated On :4 ஜூன் 2026, 12:01 am IST

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் கோடைத் திருநாள் என்னும் பூச்சாற்று உற்சவம் புதன்கிழமை மாலை தொடங்கியது.

ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து உற்சவ விழாக்களும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் நடைபெறும். அதன்படி நம்பெருமாளுக்கு கோடைத் திருநாள் விழா முடிவுற்ற நிலையில் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு வெளிக்கோடை, உள்கோடை என 10 நாள்கள் நடைபெறும் கோடைத் திருநாள் விழா புதன்கிழமை தொடங்கியது.

இதில் வெளிக்கோடைத் திருநாளின் முதல் நாளையொட்டி மாலை 6 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியாா் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கோடை நாலுகால் மண்டபத்துக்கு இரவு 7 மணிக்கு வந்து சோ்ந்தாா். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

பின்னா் அங்கிருந்து புறப்பட்டு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா். வரும் 7 ஆம் தேதி வரை மேற்படி நேரங்களில் கோடை மண்டபத்தில் ஸ்ரீரங்கநாச்சியாா் எழுந்தருளி, பூச்சாற்று கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதிக்கிறாா்.

அதைத் தொடா்ந்து 8 ஆம் தேதி தொடங்கும் உள்கோடைத்திருநாள் விழா 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.