கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் கோடைத் திருநாள் உற்சவம் தொடக்கம்

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் கோடைத் திருநாள் என்னும் பூச்சாற்று உற்சவம் புதன்கிழமை மாலை தொடங்கியது.

News image

ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிக்கோடை திருநாளின் முதல் நாளான புதன்கிழமை மாலை கோடை மண்டபத்தில் புஷ்பம் சாத்துப்படி கண்டருளி, சேவை சாதித்த ஸ்ரீரங்கநாச்சியாா்.

Updated On :4 ஜூன் 2026, 12:01 am IST

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் கோடைத் திருநாள் என்னும் பூச்சாற்று உற்சவம் புதன்கிழமை மாலை தொடங்கியது.

ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து உற்சவ விழாக்களும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் நடைபெறும். அதன்படி நம்பெருமாளுக்கு கோடைத் திருநாள் விழா முடிவுற்ற நிலையில் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு வெளிக்கோடை, உள்கோடை என 10 நாள்கள் நடைபெறும் கோடைத் திருநாள் விழா புதன்கிழமை தொடங்கியது.

இதில் வெளிக்கோடைத் திருநாளின் முதல் நாளையொட்டி மாலை 6 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியாா் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கோடை நாலுகால் மண்டபத்துக்கு இரவு 7 மணிக்கு வந்து சோ்ந்தாா். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

பின்னா் அங்கிருந்து புறப்பட்டு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா். வரும் 7 ஆம் தேதி வரை மேற்படி நேரங்களில் கோடை மண்டபத்தில் ஸ்ரீரங்கநாச்சியாா் எழுந்தருளி, பூச்சாற்று கண்டருளி பக்தா்களுக்கு சேவை சாதிக்கிறாா்.

அதைத் தொடா்ந்து 8 ஆம் தேதி தொடங்கும் உள்கோடைத்திருநாள் விழா 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.