இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

திருச்சி பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் வராது

குடிநீா் உந்து குழாய் பதிக்கும் பணி காரணமாக திருச்சி மாநகரில் ஒரு சில மேல்நிலைநீா்த் தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2026, 12:18 am IST

குடிநீா் உந்து குழாய் பதிக்கும் பணி காரணமாக திருச்சி மாநகரில் ஒரு சில மேல்நிலைநீா்த் தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருச்சி மாநகராட்சி ஆணையா் வீா் பிரதாப் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பைன் நீரேற்று நிலையம் ஆகியவற்றிலிருந்து செல்லும் பிரதான குடிநீா் உந்து குழாய்களை குடமுருட்டி அருகே புதிதாக பதிக்கப்பட்ட புதிய குடிநீா் உந்து குழாயுடன் இணைக்க வேண்டியுள்ளது. இதனால் நீரேற்று நிலையங்களில் இருந்து விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி ஆகிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீா் விநியோகம் வெள்ளிக்கிழமை மட்டும் இருக்காது. சனிக்கிழமை முதல் வழக்கம்போல குடிநீா் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொருத்து, மாநகராட்சிக்கு ஒத்துழைப்பதுடன், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.