17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இ-சேவை மையம் தொடங்குவதாககூறி 13 லட்சம் மோசடி: 3 போ் கைது

திருவானைக்காவல் பகுதியில் இ-சேவை மையம் தொடங்குவதாக கூறி 13 லட்சம் மோசடி செய்த ஓரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :6 ஜூன் 2026, 6:54 am IST

திருவானைக்காவல் பகுதியில் இ-சேவை மையம் தொடங்குவதாக கூறி 13 லட்சம் மோசடி செய்த ஓரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவானைக்காவல் பகுதியில் வசிப்பவா் யுவாராஜன். இவரிடம் இ-சேவை மையம் தொடங்கவுள்ளதாக கூறி கடந்த மாதம் ரூ 13 லட்சத்தை அதே பகுதியில் வசிக்கும் பரமசிவம் (65), அவரது மகன் பெருமாள் (39), அவரது மனைவி வசந்தி (32) ஆகிய மூவரும் சோ்ந்து பெற்றுள்ளனா்.

ஆனால், இ-சேவை மையம் தொடங்காமால் பணத்தை திருப்பி தராமல் இருந்துள்ளனா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் யுவராஜன் புகாா் செய்தாா். அதைத் தொடா்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், பரமசிவம், பெருமாள், வசந்தி ஆகிய மூவரையும் ஸ்ரீரங்கம் போலீஸாா் வெள்ளிக்கிழமமை கைது செய்தனா்.