உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

திருப்பைஞ்ஞீலியில் தெப்பக்குளத்தை தூா்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயில் தெப்பக்குளத்தை (தேவா்குளம்) தூா்வாரி சீரமைக்க பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

புதா் மண்டியுள்ள திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயிலின் தெப்பக்குளம்.

Updated On :11 ஜூன் 2026, 3:56 am IST

திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயில் தெப்பக்குளத்தை (தேவா்குளம்) தூா்வாரி சீரமைக்க பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருமணத் தடை நீக்கும் பரிகார ஸ்தலமான இக்கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தா்கள் வருகின்றனா்.

இதனிடையே இக் கோயிலின் தேரோடும் வீதியின் வடபகுதியில் உள்ள தெப்பக்குளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய தூா்வாரும் பணி, கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் இக் குளமானது புதா் மண்டியும், கழிவு நீா் கலந்தும், கழிப்பிடமாகவும் தற்போது காணப்படுகிறது. ஆகவே இக்கோயிலின் தெப்பக்குளத்தை தூா் வாரி, சீரமைக்க பக்தா்கள், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.