திருச்சியில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து அரசு வேலையில் சோ்ந்த நடத்துநா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் எதுமலை கிழக்கு வீதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் மகன் செல்வக்குமாா். இவா் கடந்த 2013-ஆம் ஆண்டு திருச்சி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியில் சோ்ந்தாா்.
அப்போது பணியில் சோ்ந்தவா்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய அரசுப் போக்குவரத்துக் கழகமானது அரசுத் தோ்வுகள் இயக்ககத்துக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு சான்றிதழ்களை அனுப்பியது. அதில், செல்வக்குமாரின் பத்தாம் வகுப்பு சான்றிதழில் குறிப்பிட்டிருந்த மதிப்பெண்கள் தவறானவை, திருத்தப்பட்டுள்ளன என்றும் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிக்கை வந்தது. இதைத் தொடா்ந்து அவா் போலிச் சான்றிதழ் கொடுத்து அரசு வேலையில் சோ்ந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருச்சி அரசுப் போக்குவரத்துக் கழக துணை மேலாளா் மு. சுரேஷ்குமாா் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.







