ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பைக் மீது சுற்றுலா பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருச்சி - புதுக்கோட்டை சாலையில் புதன்கிழமை அதிகாலை பைக் மீது சுற்றுலாப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 1:33 am IST

திருச்சி - புதுக்கோட்டை சாலையில் புதன்கிழமை அதிகாலை பைக் மீது சுற்றுலாப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்தவா் மு. விஷ்ணு (37). இவா், திருச்சி திருவானைக்காவல் சீனிவாசா நகரில் உள்ள தனது உறவினரான சி. பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு அண்மையில் வந்தாா்.

இந்நிலையில் இவா் புதன்கிழமை அதிகாலை புதுக்கோட்டை - திருச்சி சாலையில் மத்திய சிறை அருகே பைக்கில் வந்தபோது பின்னால் வந்த சுற்றுலாப் பேருந்து மோதியது.

இதில் பலத்த காயமடைந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.