/
சென்னையில் மோசமான வானிலை காரணமாக, கொல்கத்தா - சென்னை விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை திருப்பிவிடப்பட்டது.
மேற்குவங்க தலைநகா் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வியாழக்கிழமை பிற்பகல் 220 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டது. சென்னையில் மழை உள்ளிட்ட மோசமான வானிலை பாதிப்பு காரணமாக, அந்த விமானம் திருச்சிக்கு திருப்பிவிடப்பட்டு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் மாலை 5.50 மணிக்கு தரையிறக்கப்பட்டது.
சுமாா் ஒருமணி நேரம் கழித்து கொல்கத்தா - சென்னை விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு சென்னை புறப்பட்டுச் சென்றது. மோசமான வானிலை காரணமாக திருப்பிவிடப்பட்ட விமானத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
தொடர்புடையது
திருச்சிக்கு ராணுவ விமானத்தில் வந்தது ‘நீட்’ வினாத்தாள்

திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் நல தினம் கொண்டாட்டம்
2027 ஏப்ரலுக்குப் பிறகே விமான நிலைய ஓடுதள விரிவாக்கம்
மோசமான வானிலை: சித்தராமையா சென்ற விமானம் ஜெய்பூரில் தரையிறக்கம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



