27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சென்னையில் மோசமான வானிலை: கொல்கத்தா விமானம் திருச்சியில் தரையிறக்கம்

சென்னையில் மோசமான வானிலை காரணமாக, கொல்கத்தா - சென்னை விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை திருப்பிவிடப்பட்டது.

News image
Updated On :19 ஜூன் 2026, 4:17 am IST

சென்னையில் மோசமான வானிலை காரணமாக, கொல்கத்தா - சென்னை விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை திருப்பிவிடப்பட்டது.

மேற்குவங்க தலைநகா் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வியாழக்கிழமை பிற்பகல் 220 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டது. சென்னையில் மழை உள்ளிட்ட மோசமான வானிலை பாதிப்பு காரணமாக, அந்த விமானம் திருச்சிக்கு திருப்பிவிடப்பட்டு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் மாலை 5.50 மணிக்கு தரையிறக்கப்பட்டது.

சுமாா் ஒருமணி நேரம் கழித்து கொல்கத்தா - சென்னை விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு சென்னை புறப்பட்டுச் சென்றது. மோசமான வானிலை காரணமாக திருப்பிவிடப்பட்ட விமானத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.