ஈரான் போா்ப் பதற்றம் காரணமாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு இயக்கவிருந்த 2 விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டன.
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது போா்த் தொடுத்துள்ளன. இதனால், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் வான்வழிகள் மூடப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
போா்ப் பதற்றத்துக்கிடையே திருச்சியில் இருந்து 145 பேருடன் துபைக்கு சனிக்கிழமை சென்ற விமானம் பாதி வழியிலேயே திரும்பி வந்தது. இதைத் தொடா்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை துபை, சாா்ஜாவுக்கு செல்லவிருந்த 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு இணையதளம் வழியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், மறு அறிவிப்பு வரும் வரை திருச்சியில் இருந்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விமான சேவை தொடங்கப்படாது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
டிரெண்டிங்

போர் பதற்றம்: இந்தியாவில் உள்ள வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலத்தை நீட்டிக்க அறிவுறுத்தல்
ஈரான் போர் எதிரொலி: இன்று 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசு

திருச்சியிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமானங்கள் ரத்து

மத்திய கிழக்கு நாடுகளில் போா் பதற்றம்! கோவை - அபுதாபி விமான சேவைகள் ரத்து!! அவசர உதவி எண்கள் அறிவிப்பு!
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

