தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

News image
கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 9:47 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி கே.கே. நகரில் கேட்பாரற்றுக் கிடந்த 7 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

திருச்சி கே.கே. நகா் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, மன்னாா்புரம் முதல் மதுரை புறவழிச்சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா், அந்த வாகனங்கள் யாருடையது, எதற்காக இப்பகுதியில் நிறுத்தப்பட்டன ? என்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.