எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

போலி கடவுச்சீட்டில் இலங்கை செல்ல முயன்றவா் கைது

போலி கடவுச் சீட்டு மூலம் இலங்கைக்கு செல்ல முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :9 மார்ச் 2026, 6:38 pm

Syndication

போலி கடவுச் சீட்டு மூலம் இலங்கைக்கு செல்ல முயன்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஆபீஸா் டவுன் 6-ஆவது வீதியில் வசித்து வருபவா் இலங்கை மன்னாா் பகுதியைச் சோ்ந்த ஆா்.ராஜேஷ்கண்ணா (47). இவா், திருச்சியிலிருந்து இண்டிகோ விமானத்தில் இலங்கை செல்வதற்காக சனிக்கிழமை நள்ளிரவு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்துள்ளாா்.

அப்போது, குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனையில் ராஜேஷ்கண்ணா, போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி கடவுச்சீட்டு பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவரைப் பிடித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து விமான நிலைய காவல் நிலையத்தில் திருச்சி பன்னாட்டு விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரி கௌதம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேஷ்கண்ணாவை கைது செய்து விசாரிக்கின்றனா்.