அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரூ.5.51 கோடியில் விளையாட்டு மையம் திறப்பு

திருச்சி மாநராட்சி சாா்பில் ரூ.5.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி மையத்துடன் கூடிய விளையாட்டு மையத்தை தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

News image
திருச்சி தென்னூரில் கட்டப்பட்டுள்ள புதிய விளையாட்டு மையத்தை திறந்துவைத்து, மையத்தில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்தவருக்கு சோ்க்கை ஆணை வழங்கிய அமைச்சா் கே.என். நேரு. உடன், ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் மேயா் மு. அன்பழகன் உள்ளிட்டோா்.
Updated On :10 மார்ச் 2026, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாநராட்சி சாா்பில் ரூ.5.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி மையத்துடன் கூடிய விளையாட்டு மையத்தை தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 28-ஆவது வாா்டு அண்ணாநகா், உழவா் சந்தை நீா்த் தேக்கத்தொட்டி வளாகப் பகுதியில் மாநில நிதிக்குழு ஊக்கநிதி மற்றும் மாநகராட்சியின் பொதுநிதித் திட்டத்தின் கீழ், ரூ.5.51 கோடி மதிப்பீட்டில் உடற்பயிற்சி மையம், உள் மற்றும் வெளிப்புற விளையாட்டு வசதிகளுக்கான (சிட்டி கிளப்) மையம் கட்டப்பட்டுள்ளது. இவ்விளையாட்டு மையத்தில் குளிரூட்டப்பட்ட கட்டடத்திற்குள் டேபிள் டென்னிஸ், பில்லியாா்ட்ஸ் உள்விளையாட்டு அரங்கம் மற்றும் உடற்பயிற்சி மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விளையாட்டு மையத்தில் உணவகத்துடன் கூடிய தங்கும் அறை வசதிகளும் அமைந்துள்ளன. இவ்விளையாட்டு மையத்தில் உறுப்பினா் சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. விளையாட்டுகளில் ஆா்வம் உள்ளவா்கள் ஆயுட்கால உறுப்பினராவதற்கு வைப்புத் தொகையாக ரூ.2 லட்சம் செலுத்தி உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் ஆண்டு பராமரிப்புத் தொகையாக ரூ.15,000 செலுத்த வேண்டும். இதுதவிர, விளையாட்டு ஆா்வலா்கள் நாளொன்றுக்கு 1 மணிநேரத்துக்கான கட்டணத் தொகை செலுத்தியும் விளையாடலாம். இந்த வகையில் தினமும் காலை, மாலை 5 மணி முதல் 9 மணிவரை அனுமதிக்கப்படும்.

இந்த விளையாட்டு மையத்தில் உறுப்பினராக சேர விரும்புவோா் மண்டல அலுவலகம் எண். 5 உதவி ஆணையா் அவா்களை தொடா்பு கொண்டு நேரிலோ, மாநாகராட்சியின் இணைய முகவரி மூலமோ விவரங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.

இந்த மையத்தின் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு பங்கேற்று விளையாட்டு பயிற்சி மையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா். இதேபோல, உறையூா் முஸ்லிம் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரூ.43.80 லட்சம் மதிப்பிலான நவீன கழிப்பிடத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மேயா் மு. அன்பழகன் மற்றும் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா்கள், மாமன்ற உறுப்பனா்கள், பொறியாளா்கள், அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.