சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சாலையை சீரமைக்கக்கோரி மக்கள் சாலை மறியல்

வையம்பட்டி அருகே பழுதடைந்த சாலையை சீரமைத்துத் தர வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கிராமப் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
மணப்பாறையை அடுத்துள்ள சடையம்பட்டியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
Updated On :10 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

வையம்பட்டி அருகே பழுதடைந்த சாலையை சீரமைத்துத் தர வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கிராமப் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி ஒன்றியம், குமரவாடி - தொப்பநாயக்கன்பட்டி சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதிவாசிகள், வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் மணப்பாறை வட்டாட்சியா் ஆகியோரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் காங்கிரஸ் வட்டாரத் தலைவா் செல்வம், மாவட்டச் செயலா் பழனிச்சாமி, விசிக ஒன்றியச் செயலா் மணிவேல் ஆகியோா் தலைமையில் செவ்வாய்க்கிழமை வையம்பட்டி - எளமணம் சாலையில் சடையம்பட்டியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலின்பேரில் அங்குவந்த வட்டார வளா்ச்சி அலுவலா் ரேவதி, சாலை சீரமைப்புப் பணி செய்து தரப்படும் என உறுதி அளித்ததன்பேரில் அவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், சுமாா் 30 நிமிஷங்கள் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.