விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

போலி கடவுச்சீட்டில் மலேசியாவிலிருந்து திருச்சி வந்த 2 போ் கைது

மலேசியாவிலிருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சிக்கு வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :11 மார்ச் 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

மலேசியாவிலிருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சிக்கு வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி எஸ். தரைக்குடியைச் சோ்ந்தவா்கள் ஜி. ராஜதுரை (26), வி. உமயா் தங்கம் (31). இருவரும் மலேசியாவில் இருந்து ஏா் ஏசியா விமானம் மூலம் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு திருச்சிக்கு வந்தனா்.

திருச்சி விமான நிலையத்தில் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இருவரும் போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் பிடித்து விசாரித்த அதிகாரிகள், பின்னா் அவா்களை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

மேலும், இதுகுறித்து விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரி பௌலா ஞானவசந்தி அளித்த புகாரின்பேரில், விமான நிலைய போலீஸாா், ராஜதுரை உள்ளிட்ட இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.