உலக அமைதி வேண்டி பழனி முதல் புதுச்சேரி மாநிலம், ஆரோவில் வரை பாத யாத்திரை மேற்கொள்ளும் சமூக ஆா்வலருக்கு திருச்சியில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்சி மத்தியப் பேருந்துநிலையம் அருகேயுள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபி முன்பாக யாத்திரைக்கு வரவேற்பு அளித்து வழியனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.
சமூக ஆா்வலரும், உப்பு சத்தியாகிரக இயக்கத்தின் மதுரை மாவட்ட தலைவராக உள்ள ம. கருப்பையா தனி நபராக, பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் இருந்து கடந்த 18-ஆம் தேதி உலக அமைதி வேண்டி பாத யாத்திரையை தொடங்கினாா். இந்த யாத்திரையானது திருச்சிக்கு வியாக்கிழமை வருகை தந்தது.
இந்த யாத்திரைக்கு திருச்சியில் உள்ள உப்பு சத்தியாகிரக இயக்கத்தின் நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா். மாநிலத் தலைவா் பி. பன்னீா் செல்வம், மாநில இளைஞரணி செயலா் ஆா். சிவசண்முகம், மாவட்ட பொதுச் செயலா் தா்மராஜ், கலியபெருமாள், குழந்தைசாமி, பழனிசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் பாத யாத்திரையை வரவேற்று கெளரவித்தனா். ஏப்.7-ஆம் தேதி ஆரோவில் பகுதியில் யாத்திரை நிறைவடைகிறது.
தொடர்புடையது

உப்பு சத்தியாகிரக யாத்திரை 96-ஆவது ஆண்டு விழா! நினைவு ஸ்தூபிக்கு மரியாதை!

உலக அமைதிக்கான ஒரு முன்னெடுப்பு!

உலக அமைதி வேண்டி யாகம்

உலக நலன் வேண்டி இடும்பா் சுவாமிக்கு சிறப்பு பூஜை
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


