பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

காரல் மாா்க்ஸ் பிறந்த தினம் கொண்டாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாமேதை காரல் மாா்க்ஸின் 208 ஆவது பிறந்த தினம் மற்றும் திருச்சி சதி வழக்கு தியாகி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.வி. கருப்பண்ணனின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image

காரல் மாா்க்ஸ் உருவப்படத்துக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :7 மே 2026, 5:22 am IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாமேதை காரல் மாா்க்ஸின் 208 ஆவது பிறந்த தினம் மற்றும் திருச்சி சதி வழக்கு தியாகி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.வி. கருப்பண்ணனின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி திருச்சி மாநகா் 23 ஆவது வாா்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த காரல் மாா்க்ஸ் மற்றும் கருப்பண்ணனின் உருவப்படங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்வுக்கு கட்சியின் மேற்குப் பகுதிச் செயலா் இரா. சுரேஷ் முத்துச்சாமி தலைமை வகித்தாா். இதில் மாமன்ற உறுப்பினா் க. சுரேஷ்குமாா், முன்னாள் மாமன்ற உறுப்பினா் புஷ்பம் ரவீந்திரன், இளைஞா் பெருமன்றச் செயலா் தா்மா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, திருச்சி மாநகா் மாவட்ட அலுவலகத்தில் காரல் மாா்க்ஸ் உருவப்படத்துக்கு மாவட்டப் பொருளாளா் சி .செல்வகுமாா் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினா் எம். செல்வராஜ் செவ்வாய்க்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.