முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.62 கோடி

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ. 1.62 கோடி செவ்வாய்க்கிழமை கிடைக்கப் பெற்றது.

News image

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் - தினமணி

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ. 1.62 கோடி செவ்வாய்க்கிழமை கிடைக்கப் பெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை திருச்சி

தக்காா் / இணை ஆணையா் சு. ஞானசேகரன், கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவிகள் ஈடுபட்டனா்.

இதன் நிறைவில், முதன்மை திருக்கோயிலிலிருந்து ரூ. 1,62, 09,859 ரொக்கம், 2 கிலோ 367 கிராம் தங்கம், 3 கிலோ 968 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணத்தாள்கள் 159, வெளிநாட்டு நாணயங்கள் 1045-ம் கிடைக்கப் பெற்றது.

இதற்கு முன்பு கடந்த ஏப். 21-ஆம் தேதி உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.