மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்

கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

News image

பறிமுதல்!

Updated On :17 மே 2026, 1:26 am IST

கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு மலிண்டோ- விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத் துறையினா் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது மலேசியாவை சோ்ந்த பயணி தனது உடைமைக்குள் 3 சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அதீத போதை தரும் பவுடா் போன்ற 5 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரைப் பிடித்து விசாரிக்கின்றனா். இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.