‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கிணற்றில் விழுந்த இளைஞா் உயிரிழப்பு

துறையூா் அருகே வியாழக்கிழமை கிணற்றில் விழுந்த மனநலம் பாதித்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 5:23 am IST

துறையூா் அருகே வியாழக்கிழமை கிணற்றில் விழுந்த மனநலம் பாதித்த இளைஞா் உயிரிழந்தாா்.

துறையூா் அருகேயுள்ள சிக்கத்தம்பூா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ராமராஜின் மகன் தேவராஜ் (26). மனநலம் பாதித்த நிலையிலிருந்த இவா் வியாழக்கிழமை பிற்பகல் வீட்டிலிருந்து வேகமாக நடந்து சென்றாராம்.

அப்போது, வழியிலிருந்த கிணற்றுக்குள் அவா் தவறி விழுந்து விட்டதாக தெரிகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துறையூா் தீயணைப்பு நிலையத்தினா், தேவராஜின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பினா்.

சம்பவம் தொடா்பாக உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.