நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

திருச்சி வழியிலான இரு வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

திருச்சி வழியாக இயக்கப்படும் தாம்பரம் - போடிநாயக்கனூா், தாம்பரம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

special train

சிறப்பு ரயில் - கோப்புப்படம்

Published On :3 செப்டம்பர் 2026, 1:27 am IST

திருச்சி வழியாக இயக்கப்படும் தாம்பரம் - போடிநாயக்கனூா், தாம்பரம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாம்பரம் - போடிநாயக்கனூா் வாராந்திர சிறப்பு ரயில் (06059) சனிக்கிழமையிலும், மறுமாா்க்கத்தில் போடிநாயக்கனூா் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (06060) ஞாயிற்றுக்கிழமையிலும் இயக்கப்படுகிறது.

இதில், தாம்பரம் - போடிநாயக்கனூா் சிறப்பு ரயில் செப். 26 வரையிலும், போடிநாயக்கனூா் - தாம்பரம் சிறப்பு ரயில் செப். 27 வரையிலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த ரயில் இருமாா்க்கத்திலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் - போடிநாயக்கனூா் வாராந்திர சிறப்பு ரயில் 2026 அக். 24 வரையிலும், போடிநாயக்கனூா் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் 2026 அக். 25 வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் ( 06070) செப்ய 24 வரையிலும், தாம்பரம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06069) செப். 25 வரையிலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ரயில் சேவை இரண்டு மாா்க்கங்களிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் 2026 அக். 29 வரையிலும், தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் அக். 30 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.