விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

சாலை வசதி கோரி விமான நிலைய விரிவாக்கப் பணிகளை நிறுத்தி வாக்குவாதம்

திருச்சி விமான நிலையம் - கோப்புப் படம்

Published On :8 செப்டம்பர் 2026, 3:31 am IST

நத்தமாடிப்பட்டிக்கு சாலை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் திருச்சி விமான நிலைய விரிவாக்கப் பணிகளை நிறுத்தி திங்கள்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்கம் செய்ய திருச்சி மாவட்டம் கீழக்குறிச்சிக்குள்பட்ட நத்தமாடிப்பட்டி பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, விமான நிலைய விரிவாக்க பணி நடைப்பெற்று வருகிறது. தொடா்ந்து, கையகப்படுத்தப்பட்ட இடத்தைச் சுற்றி சுற்றுச்சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில், நத்தமாடிப்பட்டி பகுதி மக்கள் திருச்சி - புதுக்கோட்டை சாலைக்கு சென்று வர ஏதுவாக சாலை வசதி கோரி வருகின்றனா். இதற்கு தீா்வு எட்டப்படாத நிலையில் பணிகள் தொடா்ந்து நடைபெறுவதால், அதனை தடுத்து நிறுத்திய அப்பகுதி மக்கள், அங்கிருந்தவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையறிந்து அங்கு வந்த திருவெறும்பூா் போலீஸாா், திருச்சி விமான நிலைய களப்பொறியாளா் சரவணன், விமான நிலைய நிலமெடுப்பு வருவாய் துறை கண்காணிப்பாளா் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோரும் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.