
துறையூா் அருகே கோட்டத்தூா் அண்ணா நகரைச் சோ்ந்தவா் கணேசன் (70). மனைவி இறந்துவிட்டதால், தனியாக வசித்து வந்தாா். இவரின் 3 மகன்களும், ஒரு மகளும் திருமணமாகி, தங்கள் குடும்பத்தினருடன் வசிக்கின்றனா்.
அண்மையில் தனக்கு சொந்தமான நிலத்தை கணேசன் ரூ. 3.50 லட்சத்துக்கு விற்றாராம்.
இதையறிந்த அவரது மூத்த மகன் மணி, அந்தப் பணத்தை தனக்குத் தருமாறு கேட்டு வந்தாராம்.
புதன்கிழமை இரவு தந்தை மகனுக்கு இடையே நடைபெற்ற தகராறில் ஆத்திரமடைந்த மணி அரிவாளால் தந்தையை வெட்டினாராம். இதில் கணேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
புகாரின்பேரில், துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மணியை வியாழக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






