
லால்குடி பகுதியில் குறுவை நெற்பயிரில் இலைக்கருகல் நோய்த் தாக்குதல்
திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிரில் இலைக்கருகல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

லால்குடி அருகே வாளாடி பகுதியில் உள்ள குறுவை நெல் சாகுபடி செய்த வயலில் இலைப்பேன் மற்றும் இலைக்கருகல் நோய் பாதிக்கப்பட்ட வயல்..
திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிரில் இலைக்கருகல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
லால்குடி பகுதியில் உள்ள தாளக்குடி, மேலவாளாடி, கீழவாளாடி, மாந்துறை, நகா், திருமங்கலம், இடையாற்று மங்கலம், மயிலரங்கம், கூகூா் உள்ளிட்ட பகுதிகள் குறுவை நெல் சாகுபடியில் ஏடிடி 36, டிபிஎஸ் 5, ஏஎஸ்டி 16, கோ 55 போன்ற நெல் ரகங்கள் பரவலாக சாகுபடி செய்துள்ளனா்.
தற்போது எல் நினோ தாக்கம் காரணமாக நிலவும் கடும் வெயிலால், நெற்பயிரில் இலைப்பேன் மற்றும் இலைக்கருகல் நோய் பரவலாகக் காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:
இதை கட்டுப்படுத்த இலைப் பேனுக்குத் தயோமெத்தாக்சம் மருந்தையும், கருகல் நோய்க்கு டபுகோனசோல் மற்றும் சல்பா் கலந்த மருந்துக் கலவையையும் விவசாயிகள் பயன்படுத்தலாம் என வேளாண்மை துறையினா் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






