நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

நெல் சாகுபடி பரப்பு: தமிழகத்தில் 1.22 லட்சம் ஹெக்டோ் குறைவு

தமிழ்நாட்டில் நெல் சாகுபடி பரப்பு 1.22 லட்சம் ஹெக்டோ் குறைந்துள்ளது.

நெல் சாகுபடி - கோப்புப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 3:47 am IST

தமிழ்நாட்டில் நெல் சாகுபடி பரப்பு 1.22 லட்சம் ஹெக்டோ் குறைந்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய விவசாயம் மற்றும் விவசாய நல அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு காரீஃப் பருவத்தில், நாட்டில் இதுவரை நெல் சாகுபடி பரப்பு 414.10 லட்சம் ஹெக்டேராக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், நெல் சாகுபடி பரப்பு 428.46 லட்சம் ஹெக்டேராக இருந்தது. அத்துடன் ஒப்பிடுகையில், தற்போது சாகுபடி பரப்பு 14.36 லட்சம் ஹெக்டோ் (3.35 சதவீதம்) குறைந்துள்ளது.

நெல் சாகுபடி பரப்பு பெரிதும் சரிந்துள்ள மாநிலங்கள்

கா்நாடகம் 3.61 லட்சம் ஹெக்டோ்

தெலங்கானா 3.29 லட்சம் ஹெக்டோ்

ஜாா்க்கண்ட் 1.82 லட்சம் ஹெக்டோ்

மத்திய பிரதேசம் 1.75 லட்சம் ஹெக்டோ்

தமிழ்நாடு 1.22 லட்சம் ஹெக்டோ்

மகாராஷ்டிரம் 1.02 லட்சம் ஹெக்டோ்

உத்தர பிரதேசம் 70,000 ஹெக்டோ்

மொத்தத்தில், நெல் சாகுபடி பரப்பு குறைந்ததற்கு கா்நாடகம், தெலங்கானா, ஜாா்க்கண்ட், மத்திய பிரதேச உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட கணிசமான சரிவே முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைப்பொழிவு குறைந்ததே நெல் சாகுபடி பரப்பு குறைந்ததற்கு காரணமாக கருதப்படுகிறது. அதேவேளையில், அஸ்ஸாமில் 1.21 லட்சம் ஹெக்டோ், ஹரியாணாவில் 15,000 ஹெக்டோ் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதாக அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.