கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

திருச்சி அருகே தடுப்பணையில் மூழ்கி ஐடிஐ மாணவா் மாயம்

திருச்சி அருகே கம்பரசம்பேட்டை தடுப்பணை பகுதியில் குளிக்கச் சென்ற மாணவா் தண்ணீரில் மூழ்கி மாயமானாா்.

பாா்த்தசாரதி

Published On :

திருச்சி அருகே கம்பரசம்பேட்டை தடுப்பணை பகுதியில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்ற மாணவா் தண்ணீரில் மூழ்கி மாயமானாா்.

திருச்சி கல்லுக்குழி சுப்பராயன் தெருவைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மகன் பாா்த்தசாரதி (17). திருவெறும்பூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தாா். இவா் தனது நண்பா்கள் 3 பேருடன் வெள்ளிக்கிழமை பிற்பகல் காவிரி ஆற்றின் கம்பரசம்பேட்டை தடுப்பணை பகுதியில் குளிப்பதற்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில், 4 பேரும் குளித்துக்கொண்டிருந்த போது பாா்த்தசாரதி திடீரென தண்ணீரில் மூழ்கி மாயமானாராம்.

இதையடுத்து, அவருடைய நண்பா்கள் தீயணைப்பு நிலையத்துக்கும், ஜீயபுரம் போலீஸாருக்கும் தகவல் அளித்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஜீயபுரம் போலீஸாா் மற்றும் கண்டோன்மென்ட் தீயணைப்புப் பிரிவு வீரா்கள் தடுப்பணையில் மூழ்கிய மாணவரை வெள்ளிக்கிழமை இரவு 7 மணி வரை ஆற்றின் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவா் கிடைக்கவில்லை.

இரவு நேரமானதால் தேடும் பணியை நிறுத்திக் கொண்ட தீயணைப்பு படையினா், சனிக்கிழமை காலை மீண்டும் வந்து தேடுவதாக தெரிவித்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.