வேலூர், ஜன. 8: நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆட்சியர் செ.ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மைக்ரோ பைனான்ஸ் (நுண்கடன் நிறுவனங்கள்) எனும் நிதி அமைப்பினர் தாமாகவே முன்வந்து பொதுமக்களை வற்புறுத்தி, வட்டிக்கு கடன் வழங்கிவருகின்றனர்.
கடன் தவணை செலுத்த தவறியவர்களை துன்புறுத்தல், அச்சுறுத்துதல், வாங்கிய கடனை திரும்ப செலுத்த மேலும் அதிக வட்டிக்கு கடன் வழங்குதல் உள்ளிட்ட செயல்களால் கடன் செலுத்த இயலாத அப்பாவி மக்கள் தற்கொலை போன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
கடன் பெற்றவர்கள் வட்டி கட்டவில்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காமல் அவர்களை மிரட்டுவதால் அவர்கள் அந்த கடனை செலுத்தமுடியாமல் மீளாத் துயரத்துக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகிறார்கள்.
இதுபோன்ற நபர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாமாகவே முன்வந்து வற்புறுத்தி கடன்கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்கள் மீது தகவல் தெரிவித்தால் அரசு விதிமுறைப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தவறு செய்யும் நுண்கடன் நிறுவனங்கள் மீது காவல் நிலையத்திலும், மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் கொடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.