திருவண்ணாமலை, அக். 8: திருவண்ணாமலை நகரில் பிளாஸ்டிக் சாலைகள் போட ஏற்பாடு செய்யப்படும் என நகர்மன்றத் தலைவர் பதவிக்கான திமுக வேட்பாளர் இரா.ஸ்ரீதரன் உறுதி கூறினார்.
திருவண்ணாமலை நகராட்சி 11-வது வார்டில் உள்ள பல்வேறு தெருக்களில் கவுன்சிலர் வேட்பாளர் கோமதி குணசேகரனுடன் சென்று அவர் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.
பின்னர் அவர் 12-வது வார்டு பகுதியில் கவுன்சிலர் வேட்பாளர் ராஜாத்தி விஜயராஜுடன் ஆதரவு திரட்டி பேசியது:
திருவண்ணாமலை நகரில் பெரும்பான்மையான சாலைகள் பிளாஸ்டிக் சாலைகளாக மாற்றப்படும். இதில் 70 சதவீதம் தார், 30 சதவீதம் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படும். முதல் கட்டமாக ஏற்கெனவே புதூர் கானாத் தெருவில் உள்ள 9 சாலைகளும் பிளாஸ்டிக் சாலைகளாக மாற்ற அனுமதி தரப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - பிஇ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பு!

கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா..?- உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை

காமன்வெல்த்தில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற மீராபாய் சானு - புகைப்படங்கள்






