இந்நிலையில் வியாழக்கிழமை இரவு முதல் பெய்த மழை காரணமாக சுகநதியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மாற்றுப்பாதை மீண்டும் சேதமடைந்தது. இதனால் வெள்ளிக்கிழமை முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கீழ்ப்பாக்கம், கொவளை, கீழ்நர்மா, இரும்பேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வந்தவாசி மற்றும் உத்திரமேரூருக்கு செல்ல முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் மட்டும் ஒற்றையடி பாதை வழியாக பாலத்தை சிரமத்துடன் கடக்கின்றனர்.