உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும்

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என ஆம்பூர் நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :12 மே 2013, 5:45 am IST

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என ஆம்பூர் நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அம்மன்றம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதை தவிர்த்து மேல்சிகிச்சைக்கு வேலூர் மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கும் நிலை உள்ளது. அதனால் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ சிகிச்சை நிபுனர்களை நியமித்து, மருத்துவமனையின் சிகிச்சையை விரிவுபடுத்த வேண்டும். ஆம்பூரில் உள்ள உணவகங்களில் தரமான உணவு வழங்கப்படுகிறதா, சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் உணவு தயாரிக்கப்படுகிறதா என்பதை நகராட்சி நிர்வாகம் திடீர் சோதனை நடத்தி கண்காணிக்க வேண்டும். சேதமடைந்துள்ள உமர்சாலையை புதிதாக அமைக்கும்பொழுது தரம்மிக்க சாலையாக அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.