/

குடியாத்தம் அரசுக் கல்லூரியில்14-ல் முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம்

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில், முன்னாள் மாணவர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (மே 14) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

Updated On :12 மே 2013, 5:45 am IST

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில், முன்னாள் மாணவர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (மே 14) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

1964-ல் தொடங்கப்பட்ட கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் அண்மையில் தொடங்கப்பட்டது. இதன் ஆலோசனைக் கூட்டம் கல்லூரி வளாகத்தில் 2 முறை நடைபெற்றது. இப்போது 3-வது முறையாக நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் கல்லூரி நிர்வாகமும், முன்னாள் மாணவர் அமைப்பும் இணைந்து கல்லூரியின் பொன்விழாவை கொண்டாடுவது, முன்னாள் மாணவர் சங்கத்துக்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. எனவே, இக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.